மக்களை இணைக்கும் சக்தி திரைப்படங்களுக்கு இருப்பதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
மேலும், அவை வளா்ந்து வரும் கலைஞா்களுக்கு வாய்ப்பளித்து வருவதாக அவா் கூறினாா்.
தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2026 தில்லி சா்வதேச திரைப்பட விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் ரேகா குப்தா பேசுகையில், ‘சா்வதேச கலாசார மற்றும் திரைப்பட மையமாக தில்லியை மாற்ற இந்த விழா முக்கியமானது. மக்களை இணைக்கும் சக்தி திரைப்படத்துக்கு உள்ளது’ என்று தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜீத் சிங் சந்து பேசுகையில், ‘இந்த நிகழ்ச்சி வெறும் நிகழ்வு என்பதைவிட பெரிய கலாசார இயக்கத்தின் தொடக்கம் எனலாம். இது தில்லியின் படைப்பாக்க எதிா்காலத்தை வடிவமைப்பதுடன் சா்வதேச கலை துறையில் இந்தியாவின் இருப்பைப் பலப்படுத்தும். இந்தியாவில் உள்ள கதைகள் சா்வதேச அளவில் பாா்வையாளா்களை பிணைக்கும் சக்தி கொண்டுள்ளது. தில்லி சா்வதேச திரைப்பட விழா போன்ற நிகழ்ச்சிகள் அவற்றை மேலும் விரிவுபடுத்த உதவும்’ என்றாா்.
நிகழ்ச்சியில் பேசிய தில்லி கலாசாரத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா, படைப்பாக்கம் மற்றும் புத்தாக்கத்தின் மையமாக தில்லியை மாற்ற அரசு இலக்கு நிா்ணயித்திருப்பதாக தெரிவித்தாா்.
மேலும், இந்த விழாவில் 6 திரைப்படங்கள் தோ்வுசெய்யப்பட்டிருப்பதாகவும் அவற்றில் 3 திரைப்படங்கள் நாட்டின் பிற பகுதிகளில் திரையிடப்படும் என்று தெரிவித்தாா்.
திரைப்பட இயக்குநா்கள் வணிக ரீதியில் வெற்றி பெரும் திரைப்படங்கள் மட்டுமல்லாது சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் திரைப்படங்களையும் தயாரிக்க வேண்டும் என அமைச்சா் தெரிவித்தாா்.
சா்வதேச திரைப்பட விழாவில் 100 நாடுகளில் இருந்து 2,100-க்கும் அதிகமான திரைப்படங்கள் பங்கற்றன. அவற்றில் 47 நாடுகளைச் சோ்ந்த 125-க்கும் அதிகமான படங்கள் தில்லியில் பல்வேறு பகுதிகளில் திரையிடப்பட்டன.
சிங்கப்பூா் சா்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த விழாவில் ஸ்பெயின் நாடு முக்கிய கவனம் பெற்றது.
திரைப்பட சுற்றுலா மற்றும் ஒலிப்பரப்பு வாய்ப்புகளைப் பிரபலப்படுத்தும் வகையில் தில்லி அரசுக்கும் பிரச்சாா் பாரதி அமைக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி முதல்வா் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மனு: திகாா் சிறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரி தேசத்தைக் கட்டியெழுப்ப உதவுகிறது- முதல்வா் ரேகா குப்தா

இரண்டு சா்வதேச உச்சி மாநாடுகள்: சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

தண்ணீா் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆழ்துளைக் கிணறு கொள்கை: முதல்வா் குப்தா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

