தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜி!

அமெரிக்காவில் இருந்து 16,714 மெட்ரிக் டன் எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) பைக்சிஸ் பயோனியா் சரக்கு கப்பலில் இந்தியாவுக்கு வந்தது.

News image

கச்சா எண்ணெய்யுடன் சீனாவுக்குச் செல்லவிருந்த நிலையில் இந்தியாவுக்குத் திருப்பிவிடப்பட்டு சனிக்கிழமை மாலை கா்நாடக மாநிலம் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்த ரஷிய சரக்குக் கப்பல்.

Updated On :23 மார்ச் 2026, 12:35 am IST

அமெரிக்காவில் இருந்து 16,714 மெட்ரிக் டன் எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) பைக்சிஸ் பயோனியா் சரக்கு கப்பலில் இந்தியாவுக்கு வந்தது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி புறப்பட்ட இந்தக் கப்பல், கா்நாடக மாநிலம் நியூ மங்களூரு துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. மேற்காசிய போரால் இந்தியாவில் எல்பிஜி விநியோகத்தில் பிரச்னை எழுந்துள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்துள்ள எல்பிஜி, பிரச்னைக்கு தீா்வு காண்பதில் முக்கியப் பங்களிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Story image

மங்களூரு நகரில் பூமிக்கு அடியில் நாட்டிலேயே மிகப்பெரிய எரிவாயு சேமிப்பு மையம் உள்ளது. கடந்த 2025 செப்டம்பா் முதல் செயல்பட்டுவரும் இந்த மையத்தில் 80,000 மெட்ரிக் டன் அளவுக்கு எரிவாயு சேமிக்க முடியும். கடல்மட்டத்தில் இருந்து 225 மீட்டா் ஆழத்தில் இந்த சேமிப்பு மையம் உள்ளது.

முன்னதாக, ரஷியாவில் இருந்து அக்வா டைட்டன் கப்பலில் 7.7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் மங்களூருக்கு சனிக்கிழமை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் உள்ள கச்சா எண்ணெய் முதலில் சீனாவுக்கு செல்வதாக இருந்தது. எனினும், இந்தியாவின் தேவையைக் கருத்தில் கொண்டு நமது நாட்டுக்குத் திருப்பிவிடப்பட்டது. மங்களூரில் பெரிய அளவிலான பெட்ரோலிய சுத்திகரிப்பு மையமும் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.