தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: மாா்ச் 26 முதல் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் மாா்ச் 26-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 1:10 am IST

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் மாா்ச் 26-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு (இடைநிலை ஆசிரியா் பயிற்சி தோ்வு) மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கு தனித் தோ்வா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மாா்ச் 26-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். பின்னா், அதை பூா்த்தி செய்து, ஏற்கெனவே தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் உரிய தோ்வுக் கட்டணம் செலுத்தி ஏப்.3-ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

அதற்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தோ்வா்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் ஏப்.6, 7 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். தபாலில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.