விசா நிபந்தனைகளை மீறும் வெளிநாட்டினரைக் கண்டறிவதற்காகக் குடியேற்றப் பதிவுகளை ஒப்பிட்டுச் சரிபார்க்கும் புதிய நடைமுறையை மாநில அரசு தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் பேசுகையில்,
போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சிக்கிய 69 வெளிநாட்டினரை அரசு ஏற்கெனவே அடையாளம் கண்டு, அவர்களை நாடு கடத்தியுள்ளதாகவும், மேலும் 122 பேர் தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தங்கும் காலத்தை நீட்டித்துக்கொள்ளும் வெளிநாட்டினரை உடனடியாக நாடு கடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பல வெளிநாட்டினர் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் (குறிப்பாகக் குறுகிய கால மருத்துவ விசாக்கள்) மூலம் இந்தியாவுக்குள் நுழைகின்றனர். ஆனால், பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காகத் ஆவணங்களை அழித்துவிடுகின்றனர். அவர்களின் விசா காலம் நிறைவடைந்தப் பிறகும் அவர்கள் தொடர்ந்து மாநிலத்தில் தங்கி வருகின்றனர்.
முன்னதாக, குடியேற்றத் தரவுகளை ஒப்பிட முறையாக அமைப்பு இருக்கவில்லை, ஆனால், தற்போது மும்பையில் அத்தகைய செயல்முறையை அறிமுகப்படுத்தி வருகிறோம்.
மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு செயல்படும் போதைப்பொருள்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கேஃபேக்கள் மற்றும் கடைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்தகைய நிறுவனங்களின் வணிக உரிமங்களை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
Summary
Maharashtra Chief Minister Devendra Fadnavis on Tuesday said that the state government has initiated a mechanism to reconcile immigration records for tracking down foreign nationals overstaying their visas or violating its conditions.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நூற்றாண்டு கண்ட தமிழ்ப் பள்ளி

உத்தவுடன் ரகசிய சந்திப்பா? முதல்வா் ஃபட்னவீஸ் மறுப்பு

மீனாட்சி அம்மன் கோயிலில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ்!
பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

