கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 6 பேர் தற்போது ராஜமகேந்திரவரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அங்கீகாரமில்லாத வியாபாரி விநியோகித்த பாலை அருந்திய சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
உடனே அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணவேணி (76) பிப்ரவரி 22ஆம் தேதி பலியானார். இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
கலப்பட பாலை குடித்தோரின் சிறுநீரகம் முதலில் செயலிழந்ததும், பிறகு சிறுநீா் தடைபட்டு உயிரிழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தை தொடா்ந்து, பால் மாதிரியை சேகரித்து, பல்வேறு ஆய்வு கூடங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதேபோல், பல குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வும் நடத்தினா். விசாரணையில் எத்திலீன் கிளைக்கால் எனும் நச்சு ரசாயனம் கலந்த பாலை குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக கணேஸ்வர ராவை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The death toll from the suspected milk adulteration in East Godavari district has touched 14, while six others are currently undergoing treatment at hospitals in Rajamahendravaram.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக வெற்றி

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி! சிகிச்சையில் உள்ள 6 பேருக்கு பார்வை இழப்பு!

ஆந்திரம் பேருந்து விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


