தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எரிபொருள் தட்டுப்பாடு! செல்போன் டவர், இணைய சேவை பாதிக்கும் அபாயம்!

நாடு முழுவதும் தொலைத்தொடர்பு பாதிக்கும் அபாயம் பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :12 மார்ச் 2026, 10:51 am IST

எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால் செல்போன் வலையமைப்பு, இணைய சேவைகள் பாதிக்கப்படலாம் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்கள் தடைப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கடந்த மூன்று நாள்களாக நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்டவைக்கு வழங்கப்படும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன.

வீட்டு உபயோகப் பயன்பாட்டுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கும் கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.

இதனால், புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை (டவர்) தயாரித்து நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதே நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் படிப்படியாக டவர் தயாரிப்புகள் குறைக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டவர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எரிவாயு தேவை ஏன்?

தொலைத்தொடர்பு கோபுரங்கள் பல உலோக செயலாக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. உலோகத்தை சூடாக்கவும், கோபுரங்களின் பாகங்கள் துரு மற்றும் சேதங்களில் இருந்து பாதுகாக்க பூச்சு பூசுவதற்கு எரிவாயு அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன.

இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கம் எழுதியிருக்கும் கடிதத்தில் டவர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான எல்பிஜி, எல்என்ஜி வகை எரிவாயுகளை சீராக விநியோகிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்வெட்டு ஏற்படும்போது தொலைத்தொடர்பு கோபுரங்கள் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. கோடைக் காலம் நெருங்குவதால் மின்வெட்டு அபாயமும் எழுந்துள்ளது.

இத்தகைய சூழலில் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் செல்போன் நெட்வொர்க், இணைய சேவைகளை சீராக வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.

அதனால், தொலைத்தொடர்பு கோபுரங்களை இயக்குவதற்கு தேவையான டீசலையும் சீராக விநியோகிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Summary

Fuel shortage! Cell phone towers, internet service at risk of being disrupted!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.