தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தெலங்கானா ஆளுநராக பிரதாப் சுக்லா பதவியேற்பு!

தெலங்கானாவில் புதிய ஆளுநர் பதவியேற்பு பற்றி..

News image

ஷிவ் பிரதாப் சுக்லா - x.com

Updated On :11 மார்ச் 2026, 12:14 pm IST

தெலங்கானா ஆளுநராக ஷிவ் பிரதாப் சுக்லா புதன்கிழமை பதவியேற்றார்.

தமிழகம், தெலங்கானா உள்பட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், ஹிமாசலப் பிரதேச ஆளுநராகப் பணியாற்றிய ஷிப் பிரதாப் சுக்லா தெலங்கானா ஆளுநராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

அதன்படி, ஆளுநர் மாளிகையில் தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், ஷிப் பிரதாப் சுக்லாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஹிமாசலப் பிரதேச ஆளுநராகப் பணியாற்றிய ஷிப் பிரதாப் சுக்லா, செவ்வாயன்று மாநிலத்திற்கு வருகைதந்தபோது ரேவந்த் ரெட்டி அவருக்கு அன்பான வரவேற்பு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Shiv Pratap Shukla was sworn in as Telangana Governor on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.