ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திரிணமூல் உள்கட்சிப் பூசல்: அபிஷேக் பானர்ஜியை சந்திக்க ஓம் பிர்லா அழைப்பு?

திரிணமூல் காங்கிரஸ் உள்கட்சிப் பூசல் தொடர்பாக அபிஷேக் பானர்ஜியை சந்திக்க மக்களவைத் தலைவர் அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல்

News image

அபிஷேக் பானர்ஜி | ஓம் பிர்லா - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 5:58 pm IST

திரிணமூல் காங்கிரஸ் உள்கட்சிப் பூசல் தொடர்பாக அபிஷேக் பானர்ஜியை சந்திக்க மக்களவைத் தலைவர் அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றநிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி மீது கட்சியிக்குள்ளேயே எதிர்ப்பும் அதிருப்தியும் கிளம்பின. இதனிடையே, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாப்ரதா பானர்ஜியை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தேர்ந்தெடுத்தனர்.

மேலும், கட்சி எம்.பி.க்கள் 20 பேர் தனியாகப் பிரிந்து, தங்களைத் தனிக் குழுவாக அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸின் உள்கட்சிப் பூசல் விவகாரம் தொடர்பாக அபிஷேக் பானர்ஜி தரப்பினரை ஜூன் 19-ல் சந்திக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

TMC split: Lok Sabha Speaker invites Abhishek Banerjee for meeting on June 19

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.