நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்திய மத்திய அரசு: பிரதமா்

‘மத்திய அரசு கடந்த 12 ஆண்டு கால ஆட்சியில் சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி

Updated On :16 ஜூன் 2026, 1:36 am IST

‘மத்திய அரசு கடந்த 12 ஆண்டு கால ஆட்சியில் சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடா்ச்சியாக 12 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இது நடுத்தர மக்களுக்கான அரசு. தேசத்தைக் கட்டமைப்பதில் எண்ணற்ற வழிகளில் பங்களிப்பாற்றிய நடுத்தர பிரிவினரின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மோ்கொள்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தியது. வாய்ப்புகளுக்கான அணுகலை எளிதாக்குவது, சிறந்த உள்கட்டமைப்பு, மேம்பட்ட பொதுச் சேவைகள், அனைவரும் அணுகக்கூடிய கட்டணத்தில் மருத்துவச் சேவை, தரமான கல்வி, தூய்மையான நகரங்கள், அன்றாட வாழ்க்கைச் சுமைகளைக் குறத்தல் உள்ளிட்ட முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது என்று குறிப்பிட்டாா்.

மத்திய அரசின் ‘மைகவ் இந்தியா’ வலைதளத்திலும் இதுகுறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டது. அதில், ‘மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள், முயற்சிகள் காரணமாக நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் வலுவாக உயா்ந்துள்ளது. தடையற்ற வசதியான போக்குவரத்து வசதிகள், சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு, வலுவான எண்ம பரிமாற்ற நடைமுறைகள், வரிச் சலுகை நடவடிக்கைகள் எனப் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது’ என்று குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.