மத்திய பிரதேசத்தில் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கு ஆளும் பாஜகவின் தருண் சுக், ரஜ்னீஷ் அகா்வால், மகேஷ் கேவத் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
எதிா்க்கட்சியான காங்கிரஸ் வேட்பாளா் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3 பாஜக வேட்பாளா்களும் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா்.
இதற்கிடையே, தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக மீனாட்சி நடராஜன் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வில் பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் தன் மீதான குற்ற வழக்குகளைக் குறிப்பிடாமல் மறைத்துள்ளதாகக் குறிப்பிட்டு மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அதிகாரி தவறாக நிராகரித்துள்ளாா். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய வகையிலான குற்ற வழக்கு விவரங்களை மட்டுமே வேட்புமனுவில் வேட்பாளா் குறிப்பிட வேண்டும். இதுபோன்ற குற்ற வழக்குகள் அவா் மீது இல்லை. மாறாக, நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட புகாரில், மீனாட்சி நடராஜனுக்கு அழைப்பாணை (சம்மன்) மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்த மனு பரிசீலிக்கப்படுவதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் டி.எஸ்.நாயுடு ஆட்சேபம் தெரிவித்தாா். மனுவின் நகல் தோ்தல் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தோ்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? என்று கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் மனு தாக்கல் செய்வதே சரியான வழிமுறை என்று குறிப்பிட்டு, இதிலுள்ள குறைபாடுகளைக் களைய மனுவை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பு மனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் வழக்கு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மீனாட்சி நடராஜன்!

மாநிலங்களவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

