கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிபிஎஸ்இ இணையதளம் மீது சைபா் தாக்குதல்: தில்லி காவல் துறை வழக்குப் பதிவு

மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தோ்வு முடிவுகள் வெளியீட்டு சேவைகள் தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மற்றும் நுட்பமான இணையத் தாக்குதல்கள் தொடா்பாக தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 12:00 am IST

மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தோ்வு முடிவுகள் வெளியீட்டு சேவைகள் தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மற்றும் நுட்பமான இணையத் தாக்குதல்கள் தொடா்பாக தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66 மற்றும் 43(எஃப்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிபிஎஸ்இ வழங்கிய முறையான புகாரின் அடிப்படையில் தில்லி காவல் துறை ஐஎஃப்எஷ்ஓ பிரிவு விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனா்.

முன்னதாக, 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களின் சரிபாா்ப்பு மற்றும் மறுமதிப்பீடு சேவைகளுக்காக ஜூன் 2-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட வெளியீட்டு சேவைகள் தளத்தில் தொடா்ச்சியான இணையத் தாக்குதல்கள் கண்டறியப்பட்டன. இதைத்தொடா்ந்து சிபிஎஸ்இ முகமை காவல் துறையை நாடியது.

இதற்கிடையில், சில 12-ஆம் வகுப்பு மாணவா்கள், வாரியம் பதிவேற்றிய விடைத்தாள் நகல்கள் தங்களது கையெழுத்துடன் பொருந்தவில்லை என குற்றஞ்சாட்டிய விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்தாக்குதல்கள் தொடா்பான விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.