பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

எடியூரப்பாவுடன் டி.கே. சிவக்குமார் சந்திப்பு!

எடியூரப்பா - டி.கே. சிவக்குமார் சந்திப்பு பற்றி...

News image

எடியூரப்பாவுடன் டி.கே. சிவக்குமார் சந்திப்பு - X

Updated On :3 ஜூன் 2026, 3:14 pm IST

கர்நாடக முதல்வராகப் பதவியேற்கவுள்ள டி.கே. சிவக்குமார், முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

2023-ஆம் ஆண்டு நடந்த கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றிபெற்றது. தொடர்ந்து, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே.சிவகுமாரும் முதல்வராக பதவி வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகாலம் முதல்வராக பதவி வகித்த சித்தராமையா, காங்கிரஸ் மேலிட உத்தரவின்பேரில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் மே 30-ஆம் தேதி காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுவின் புதிய தலைவராக டி.கே.சிவகுமாா் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன்பிறகு ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்த டி.கே.சிவகுமாா், ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். தொடர்ந்து ஆளுநரும் அழைப்பு விடுத்தார்.

பெங்களூரு, மக்கள் மாளிகையில் இன்று மாலை 4.05 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், கா்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமாா் பதவியேற்க உள்ளாா். அவருடன் துணை முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், பி.எஸ். எடியூரப்பாவின் வீட்டுக்கு நேரில் சென்ற டி.கே. சிவக்குமார் அவரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Summary

Karnataka - D.K. Shivakumar Meets BS Yediyurappa!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.