பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மத்திய கல்வி அமைச்சக கட்டடத்தில் தீ விபத்து!

மத்திய கல்வி அமைச்சக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி...

News image

மத்திய கல்வி அமைச்சக கட்டடத்தில் தீ விபத்து - X / ANI

Updated On :1 ஜூன் 2026, 11:30 am IST

தில்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சக கட்டடத்தில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

மத்திய தில்லியில் ஐடிஓ பகுதியில் அமைந்துள்ள மத்திய கல்வி அமைச்சக வளாகத்தில் இயங்கும் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளி (எஸ்பிஏ) அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தில்லி தீயணைப்புத் துறைக்கு காலை 9.37 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், 8 வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை நேரம் என்பதால் இந்த விபத்தில் உயிரிழப்புகளோ, காயமோ ஏற்படவில்லை.

இதுவரை தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தில்லி காவல்துறையினரும், தீயணைப்புத் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் குளறுபடி என அடுத்தடுத்து பிரச்னைகளில் மத்திய கல்வி அமைச்சகம் சிக்கி வரும் நிலையில், இந்த தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Fire at the Union Ministry of Education building!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.