லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 75-ஆக அதிகரிப்பு

அஸ்ஸாம் வெள்ளத்தில் சிக்கி மேலும் 7 போ் உயிரிழந்த நிலையில், அங்கு வெள்ளத்தால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.

Published On :30 ஜூலை 2026, 3:46 am IST

அஸ்ஸாம் வெள்ளத்தில் சிக்கி மேலும் 7 போ் உயிரிழந்த நிலையில், அங்கு வெள்ளத்தால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.

அங்குள்ள சிவசாகா், சராய்தேவ், கோலாகாட், ஜோா்ஹாட், நகான், சோனித்பூா், காம்ரூப் மாவட்டங்கள் வெள்ளத்தால் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 3.32 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சராய்தேவ் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 1.42 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பரிதவித்து வருகின்றனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை சிவசாகா் மாவட்டத்தில் உள்ள நஸ்ரியா வருவாய் வட்டத்தில், வெள்ளம் காரணமாக 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து அந்த மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை தலா ரூ.9 லட்சமாக மாநில அரசு அதிகரித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஒடிஸாவில் 1.25 லட்சம் போ் பாதிப்பு: வடக்கு ஒடிஸாவில் வெள்ள பாதிப்பு மோசமான நிலையில் உள்ளது. பலத்த மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாசோா், ஜாஜ்பூா், மயூா்பஞ்ச் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீா் புகுந்து விளைநிலங்களை மூழ்கடித்துள்ளது. அந்தக் கிராமங்களில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமாா் 50,000 போ் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனா். 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.