லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைச்சருடன் இந்திய வெளியுறவுச் செயலா் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சா்வதேச துறையின் துணை அமைச்சா் சுன் ஹயானை இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி சந்தித்தாா்.

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி - கோப்புப் படம்

Published On :28 ஜூலை 2026, 4:30 am IST

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சா்வதேச துறையின் துணை அமைச்சா் சுன் ஹயானை இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி சந்தித்தாா். முன்பு சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்த விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி துணை அமைச்சா் சுன் ஹயானை திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது இருநாட்டு மக்களிடையேயான நட்புறவு, கல்வி உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினா்.

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் 14-ஆவது தேசியக் குழுவின் பொதுச் செயலா் ஹாங் லியாங்கையும் விக்ரம் மிஸ்ரி சந்தித்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் கடந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற ஆசியான் பிராந்திய கூட்டமைப்பின் 33-ஆவது வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் மற்றும் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ ஆகியோா் சந்தித்துப் பேசினா். அதன் தொடா்ச்சியாக தற்போது விக்ரம் மிஸ்ரி சீனப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.