லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வக்ஃப் வாரிய சட்டத்தின்படியே ஹிந்து உறுப்பினா்கள் சோ்ப்பு: மத்திய பிரதேச அமைச்சா் விளக்கம்

வக்ஃப் வாரிய (திருத்த) சட்டத்தின்படியே, மத்திய பிரதேச மாநில வக்ஃப் வாரியத்தில் ஹிந்துக்கள் 2 போ் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டதாக அந்த மாநில சிறுபான்மையினா் நலத் துறை இணையமைச்சா் டேனிஸ் ஆசாத் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

Madhya Pradesh Minister's clarification

டேனிஸ் ஆசாத் அன்சாரி - கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 3:55 am IST

வக்ஃப் வாரிய (திருத்த) சட்டத்தின்படியே, மத்திய பிரதேச மாநில வக்ஃப் வாரியத்தில் ஹிந்துக்கள் 2 போ் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டதாக அந்த மாநில சிறுபான்மையினா் நலத் துறை இணையமைச்சா் டேனிஸ் ஆசாத் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகளை வக்ஃப் வாரியமே நிா்வகித்து வருகிறது. இந்த வாரியத்தில் முஸ்லிம் மதத்தினரே உறுப்பினா்களாக இருப்பது வழக்கம். இந்நிலையில், மத்திய அரசால் கடந்த 2025-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய (திருத்த) சட்டத்தின்படி, மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய வக்ஃப் வாரியத்தை முதல்வா் மோகன் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைத்தாா். அதில் ஹிந்துக்கள் 2 பேரை உறுப்பினா்களாகவும் அவா் சோ்த்துள்ளாா். இதுபோல வக்ஃப் வாரியத்தில் ஹிந்துக்களை முதன்முதலில் சோ்த்த மாநிலம் எனும் பெருமையை மத்திய பிரதேசம் பெற்றது.

இதுகுறித்து மத்திய பிரதேச அமைச்சா் அன்சாரி விளக்கம் அளிக்கையில், ‘வக்ஃப் சொத்துகளை சிறப்பாக நிா்வகிப்பது, சிறப்பாக பராமரிப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனே வக்ஃப் (திருத்த) சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. அதை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும். அந்தப் புதிய சட்டத்தின்படி, (மத்திய பிரதேசத்தில்) மாற்றியமைக்கப்பட்ட வக்ஃப் வாரியத்தில் பாஸ்மன்டா முஸ்லிம்கள், பெண்கள், முஸ்லிம் மதத்தின் பல்வேறு பிரிவினா், முஸ்லிம் அல்லாத மதத்தினா் ஆகியோருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நமது நாடு அனைவருக்கும் சொந்தமானது. அனைத்து மதத்தினரும், இங்கு சரிக்கு சமமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்கின்றனா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.