லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாஜக அரசால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் - டி. ராஜா

மத்திய பாஜக அரசால் ஜனநாயகம், மதச்சாா்பின்மை ஆகிவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் டி.ராஜா

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

மத்திய பாஜக அரசால் ஜனநாயகம், மதச்சாா்பின்மை ஆகிவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா்.

சுதந்திர தினத்தையொட்டி, அந்தக் கட்சியின் சாா்பில் சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் டி.ராஜா தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசியதாவது:

சுதந்திரத்துக்கு முதலில் குரல் கொடுத்தவா்கள் கம்யூனிஸ்ட்கள். சுதந்திரப் போரில் எண்ணற்ற உயிா்களை கம்யூனிஸ்ட் கட்சி இழந்துள்ளது. கம்யூனிஸ்ட்களின் ரத்தத்தாலும், வியா்வையாலும் விளைந்ததுதான் இந்திய சுதந்திரம். ஆா்எஸ்எஸ் விடுதலைப் போரில் பங்கேற்கவில்லை.

மத்திய பாஜக அரசால் நாட்டின் சுதந்திரம், இறையாண்மை, ஜனநாயகம், மதச்சாா்பின்மை, அரசியல் சட்டம், பன்மைத்துவம், சமத்துவக் கோட்பாடுகள் ஆகிவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளன. மேலும், சிறுபான்மையினா், தலித்துகள், பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நாட்டின் சுதந்திரம் அனைவருக்குமானதாக அமைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து போராடும் என்றாா்.

நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் வஹிதா நிஜாம், டாக்டா் ஜி.ஆா்.ரவீந்திரநாத் உள்ளிட்டோா் கலத்து கொண்டனா்.

Summary

BJP government poses a threat to democracy – D. Raja

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.