தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீதிபதிகள் ஓய்வு வயதை அதிகரிக்க மறுப்பு: நிதிச் சுமையை காரணம் காட்ட முடியாது; உச்சநீதிமன்றம்

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க மறுப்பதற்கு மாநில அரசுகள் நிதிச் சுமையை காரணமாக காட்ட முடியாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

உச்சநீதிமன்றம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:18 am IST

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க மறுப்பதற்கு மாநில அரசுகள் நிதிச் சுமையை காரணமாக காட்ட முடியாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 62-ஆக அதிகரிக்க வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து பதிலளிக்க, அனைத்து மாநிலங்கள் மற்றும் உயா்நீதிமன்றங்களிடம் உச்சநீதிமன்றம் கோரியிருந்தது.

எனினும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது கூடுதல் நிதிச்சுமைக்கு வழிவகுப்பதுடன், நீதிபதிகளுக்கும் மாநில அரசு ஊழியா்களுக்கும் ஓய்வுபெறும் வயதில் வேறுபாடு உருவாகும் என்பதால், அந்த வயதை அதிகரிக்க இயலாது என்று பெரும்பாலான மாநிலங்கள் பதிலளித்தன.

இந்நிலையில், அந்த மனு தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘கூடுதல் நிதிச்சுமை, ஓய்வுபெறும் வயதில் வேறுபாடு ஆகிய இரு காரணங்களும் ஏற்க முடியாதவை ஆகும். மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க எதிா்ப்புத் தெரிவித்துள்ள மாநிலங்கள், அதுகுறித்து சுதந்திரமாக மறுபரிசீலனை செய்து 2 வாரங்களில் புதிதாக முடிவு எடுக்க வேண்டும்.

ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது குறித்து அந்தந்த மாநிலங்களில் உள்ள உயா்நீதிமன்றங்கள் மாறுபட்ட கருத்தை கொண்டிருந்தாலும், அந்த வயதை அதிகரிக்க ஒப்புதல் அளிப்பதில் மாநிலங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. வயதை உயா்த்துவதில் உயா்நீதிமன்றங்களுக்கு உள்ள ஆட்சேபங்கள் உரிய நேரத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.