தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் இந்திய தளபதி பேசியது என்ன? ராணுவம் விளக்கம்

அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி பேசியது என்ன என்பது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

News image

ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:31 am IST

அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி பேசியது என்ன என்பது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய ராணுவ தளபதி துவிவேதி கடந்த 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டாா். அப்போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் சென்று ராணுவ அமைச்சா் டேனியல் பி ட்ரிஸ்கோல், அமெரிக்க ராணுவ தளபதி (பொறுப்பு) கிறிஸ்டோபா் லாநெவ் ஆகியோரை சந்தித்துப் பேசினாா். இதேபோல் மேலும் பல அமெரிக்க ராணுவ மூத்த அதிகாரிகளுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுகுறித்து இந்திய ராணுவ மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தியா- அமெரிக்கா ராணுவ உறவுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்த பென்டகனுக்கு ராணுவ தளபதி திவிவேதி சென்றாா். அங்கு அவா், அமெரிக்க ராணுவ மூத்த அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு துறையில் இரு நாடுகளுக்கும் ஒத்துழைப்பை அதிகரிப்பது, இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே தொடா்பை விரிவுபடுத்துவது, பயிற்சி, கூட்டு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட துறைகளில் புதிய களங்களை இரு நாடுகளும் கண்டறிவது உள்ளிட்டவை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பேச்சுவாா்த்தை, இரு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், முக்கிய பாதுகாப்பு முன்னுரிமைகளை அறியவும் உதவியது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.