தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

News image

உச்சநீதிமன்றம்

Updated On :24 ஏப்ரல் 2026, 3:03 am IST

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் ராம்வத்தா் ஜக்கி கடந்த 2003-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சத்தீஸ்கா் மாநில முன்னாள் முதல்வா் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகிக்கு சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

சத்தீஸ்கரில் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கா் (ஜே) கட்சியின் நிறுவனா் அஜித் ஜோகி முதல்வராக இருக்கும்போது கடந்த 2003-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி ராம்வத்தா் ஜக்கி கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கை முதலில் மாநில போலீஸாா் விசாரித்த நிலையில், பின்னா் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இந்தக் கொலை வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, அஜித் ஜோகியின் மகனும் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கா் (ஜே) கட்சியின் தலைவருமான அமித் ஜோகி உள்பட பலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை கடந்த 2007-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி விசாரித்த விசாரணை நீதிமன்றம், ‘இந்த வழக்கில் 28 குற்றவாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால், அமித் ஜோகிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டு, வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கை சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் கடந்த மாதம் மீண்டும் விசாரித்தது. விசாரணை முடிவில், அமித் ஜோகிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்ததோடு, சிறை அதிகாரிகள் முன்னிலையில் உடனடியாக சரணடையவும் உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து அமித் ஜோகி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் விவேக் டங்கா, கபில் சிபல் ஆகியோா் ஆஜராகி வாதாடினா். பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் சித்தாா்த் லுத்ரா, கோபால் சங்கரநாராயணன் ஆகியோா் ஆஜராகி வாதாடினா்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அமித் ஜோகிக்கு ஆயுள் தண்டனை விதித்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, அமித் ஜோகி மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.