பெங்களூரில் காதலை அழகாகச் சொல்லப் போகிறேன் என்று கூறி, காதலனை வீட்டுக்கு வர வைத்து ஏமாற்றி, கட்டி வைத்து எரித்துக் கொலை செய்த காதலியைப் பற்றிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வெளிநாடுகளில் தற்போது காதலர்களை கட்டிப்போட்டுவிட்டு காதலை சொல்லும் புதிய பாணி பரவலாகி வருகிறது.
அதுபோல, காதலைச் சொல்லப்போவதாக, காதலன் கிரணை வீட்டுக்கு அழைத்து வந்த பிரேரனா (27) தனது காதலன், ஏமாற்றிவிடுவார் என்றும், திருமணம் செய்ய மாட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எரித்துக் கொலை செய்தார்.
இந்த சம்பவத்தில், காதலன் தன்னை நிராகரிப்பதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கொலை செய்ததும், அவரை எரித்துக் கொன்றுவிட்டு, அங்கே செல்போன் மூலம் அதனைப் படம்பிடித்து அவர் துடிதுடித்து பலியாவதை பார்த்துள்ளார்.
தாய் மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வந்த பிரேரனா, வீட்டில் ஆள் இல்லாத போது கிரணை வரவழைத்துள்ளார். அப்போது, ஒரு நாற்காலியில் அமர வைத்து அவரது கை, கால்களை கட்டி, கண்களையும் மூடியிருக்கிறார். இது அனைத்தையும் அவர் விடியோவிலும் படம்பிடித்திருக்கிறார்.
வெளிநாடுகளில் இப்போதெல்லாம் காதலர்கள் இப்படித்தான் காதலைச் சொல்கிறார்கள் என்று கிரணை சமாதானம் செய்து இதற்கு ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார். விரைவில் அவர் கையில் பூவுடன் கண்களைத் திறந்துவிடுவார் என்று நினைத்தால், கிரண் மீது மண்ணெண்னை ஊற்றப்பட்டுள்ளது. அவர் என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள் தீ வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த சம்பவம் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர், பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Summary
Girlfriend tied up her boyfriend and set him on fire, saying she would tell him about her love beautifully!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகிரியில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணி

தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த உதயநிதி!
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மாய யதார்த்த, அதீதமான ஜோஸெ ஸரமாகோவின் நாவல்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

