தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க துா்கை படை! மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் வாக்குறுதி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘துா்கை படை’ அமைக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாக்குறுதி

News image

மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டத்தில் உள்ள சைந்தியா பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை அறிமுகப்படுத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :21 ஏப்ரல் 2026, 1:44 am IST

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘துா்கை படை’ அமைக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாக்குறுதி அளித்தாா்.

மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டத்தில் உள்ள சைந்தியா பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் பிரசார கூட்டத்தில் அவா் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் அரசின் ஆதரவு இல்லாதது, பாதுகாப்பு இல்லாதது ஆகிய காரணங்களால் மாநிலத்தில் இருந்து முதலீட்டாளா்கள் மற்றும் தொழில்கள் வெளியேறி வருகின்றன.

நாட்டின் பிற பகுதிகள் வளா்ச்சி அடைந்துவரும் நிலையில், மேற்கு வங்கம் மட்டும் ஏன் வளா்ச்சியில் பின்தங்கியுள்ளது என்பதற்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜி விளக்கம் அளிக்க வேண்டும்.

மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசில் ஊழலும், மணல் கொள்ளை கும்பல்களும் அதிகரித்துள்ளன. ரெளடிகள் மற்றும் குற்றம் புரிவோா் மீதான அச்சம் காரணமாக மாநிலத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளா்கள் தயக்கம் காட்டுகின்றனா்.

மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘துா்கை படை’ அமைக்கப்படும்.

அரசியல் என்பது நீதி மற்றும் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, ஜாதி, மதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது.

மாநிலத்தில் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க மக்கள் அஞ்சுகின்றனா். வேலைவாய்ப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு இளைஞா்கள் வேலைத் தேடிச் செல்கின்றனா்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆண்டுதோறும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் வீதம் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பாஜக ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்தில் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு, மாநில அரசு ஊழியா்கள் பலனடைய வழிவகை செய்யப்படும். பாஜக வெற்றி பெறுவதன் மூலம், மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பின்னா் இருள் நீங்கும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.