ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

எனக்கும் மோடிக்கும் 'மனைவிப் பிரச்னை' இல்லை: சிரிப்பலையை ஏற்படுத்திய ராகுல்

எனக்கும் மோடிக்கும் 'மனைவிப் பிரச்னை' இல்லை என்று கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார் ராகுல்

News image

ராகுல் காந்தி - PTI

Updated On :17 ஏப்ரல் 2026, 4:13 pm IST

மக்களவையில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், எனக்கும் மோடிக்கும் மனைவிப் பிரச்னை இல்லை என்று கூறியதால் சிரிப்பலை ஏற்பட்டது.

மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தவும், தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கவும் வகை செய்யும் மூன்று மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

விவாதத்தின் நிறைவாக இன்று மாலை மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் தோற்றத்தை வடிவமைப்பதன் மையப்புள்ளியாக விளங்குபவர்கள் பெண்கள், அவர்கள்தான் சமூகத்தின் இயக்க சக்தி என்றார்.

மேலும், தாய், சகோதரி மற்றும் மனைவி என, குடும்பத்தில் உள்ள பெண்களால்தான் பலரும் தாக்கத்தைப் பெற்றுள்ளோம், அவர்கள்தான் சமூகத்தைப் பற்றி கற்பிக்கிறார்.

பெண்கள்தான் சக்தியின் மையப்பகுதி, தேசிய தோற்றத்தின் இயங்கு சக்தியாக, நமது தேசிய கண்ணோட்டத்தின் மையமாக விளங்குவது பெண்கள்தான். நம் அனைவருமே, இந்த அறையில் உள்ள ஒவ்வொருவரும், அவரவர் வாழ்வில் இணைந்துள்ள பெண்களிடமிருந்து நிறைய தாக்கத்தைப் பெற்றிருக்கிறோம், அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம், வாழ்க்கையில் நிறை கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றார்.

இவ்வாறு மகளிர் பற்றி பேசுகையில், தாய், சகோதரி, மனைவி என்று பெண்களைப் பற்றி சொன்னவர், எனக்கும் பிரதமர் மோடிக்கும் மனைவி பிரச்னை இல்லை என்று கூறி சிரித்தார். இதனைக் கேட்ட மக்களவை உறுப்பினர்களும், கடும் விவாதத்துக்கு இடையே அவர்களை மறந்து வாய்விட்டு சிரித்ததால், அவை முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

விவாதத்தின் நிறைவாக இன்று மாலை மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது.

மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு, யூனியன் பிரதேச சட்டத் திருத்தம் என இந்த மூன்று மசோதாக்களையும் கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கில், மத்திய அரசு நாடாளுமன்ற மூன்று நாள் சிறப்பு அமர்வு வியாழக்கிமை தொடங்கியது.

இந்த மூன்று மசோதாக்களும் அறிமுக நிலையிலேயே கடும் எதிர்ப்பை சந்தித்தன. இதையடுத்து வாக்கெடுப்புக்குப் பிறகே அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து விவாதம் நடைபெற்று நிறைவு பெற்றதும் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Modi and I don't have 'wife issues' said Rahul creates a stir

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.