ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!

மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது குறித்து...

News image

காங்கிரஸ் - படம்: கோப்பிலிருந்து

Updated On :16 ஏப்ரல் 2026, 7:27 pm IST

மாநிலங்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த ஹரியாணாவின் 5 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை அக்கட்சியின் தலைமை இடைநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த மார்ச் 16 அன்று நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், ஹரியாணாவில் பாஜக ஆதரவு பெற்ற சதீஷ் நந்தல் எனும் சுயட்ச்சை வேட்பாளருக்கு, அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, ஹரியாணா காங்கிரஸ் கட்சியின் தராம்பால் மாலிக் தலைமையிலான ஒழுங்குமுறைக் குழு, நரைங்கர் தொகுதியின் ஷேலி சவுத்ரி, சதௌராவின் ரேணு பாலா, ரதியாவின் ஜர்னைல் சிங், ஹாதினிலின் முகமது இஸ்ராயில் மற்றும் புன்ஹானாவின் முகமது இலியாஸ் ஆகியோரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்தது.

இந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படும் ஹரியாணாவின் 5 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஒப்புதல் வழங்கியுள்ளார்.

முன்னதாக, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கரம்வீர் சிங் பௌத்துக்கே வாக்களித்ததாகக் கூறி ரேணு பாலா, ஷேலி சவுத்ரி மற்றும் ஜர்னைல் சிங் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

மேலும், கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் 5 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக, ஹரியாணா காங்கிரஸ் தலைவர் ராவ் நரேந்தர் சிங் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Congress party has suspended five of its MLAs from Haryana who voted in favor of the BJP in the Rajya Sabha elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.