உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 17 வயது சிறுமி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை குறித்து அளிக்கப்பட்ட புகாரில் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மீது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், ஹோலி பண்டிகையின்போது வண்ணப் பொடிகளை கட்டாயப்படுத்தி தூவியதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
எனினும் அவர்கள் மீது சட்டரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பெற்றோர் கேட்டுக்கொண்டதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
பின்னர் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிறகே, ஹோலி பண்டிகையின்போது நடந்தது, கூட்டுப் பாலியல் வன்கொடுமை எனத் தெரியவந்து, சிறுமியின் பெற்றோர் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சித்ரகூட் காவல் கண்காணிப்பாளர் அருண் குமார் சிங் கூறியதாவது:
''சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வாய்வழியாகவே முதலில் புகார் அளித்தார். எனினும் அவர்கள் மீது எந்தவொரு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். தற்போது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் புதிதாக பெற்றோரிடம் புகார் பெறப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்குத் தூண்டுதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினர் மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வகையில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்'' எனக் குறிப்பிட்டார்.
சமஜவாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அணில் பிரதான், பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஆறுதல் கூறினார். சட்டரீதியாக அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Summary
UP: 17-year-old Dalit girl dies by suicide after alleged gang rape; probe underway
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியில் பள்ளி ஊழியரால் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


