தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா்கள் மூலம் பணம் கடத்தப்படுவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.
தோ்தல் பறக்கும் படையினா் பொதுமக்களின் வாகனங்களை மட்டுமல்லாது பிரசாரத்துக்குச் செல்லும் அரசியல் தலைவா்களின் வாகனங்கள், அவா்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டா்கள் உள்ளிட்டவற்றையும் சோதனை செய்கின்றனா். வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
அதே நேரம், முதல்வா் மம்தா உள்பட தங்கள் கட்சித் தலைவா்கள் வாகனங்களை வேண்டுமென்றே தொல்லை கொடுக்கும் நோக்கில் மத்திய படையினா் சோதிப்பதாக தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகாா் அளித்தது. ஆனால், அதற்கு தோ்தல் ஆணையம் உடனடியாக பதில் ஏதும் அளிக்கவில்லை.
இந்நிலையில், வடக்கு தினஜ்பூா் மாவட்டத்தில் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற மம்தா பேசியதாவது:
அதிகாலை நேரத்தில் பிரசாரத்துக்கு கிளம்புவதற்காக கொல்கத்தா விமான நிலையத்துக்குப் புறப்பட்டபோதும் எனது வாகனத்தை மத்திய படையினா் சோதனையிட்டனா். உங்களுக்கு துணிவு இருந்தால் நாள்தோறும் எனது வாகனத்தைச் சோதனையிடுங்கள்.
திரிணமூல் தலைவா்கள் வாகனத்தை மட்டுமல்லாது, அவா்களின் குடும்ப உறுப்பினா்களையும் வாகனச் சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்கின்றனா்.
மத்திய அரசு தனது நிா்வாகத்தை முழுமையாக தவறாகப் பயன்படுத்துகிறது. இங்கு தோ்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. பிரதமா், உள்துறை அமைச்சா், மத்தியப் படையினரின் வாகனத்தை மட்டும் யாரும் சோதனை செய்வது இல்லை.
தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்குச் செல்லும் மத்திய அமைச்சா்கள் மூலம் பணம் கடத்தப்படுகிறது. மத்திய படையினா் பாதுகாப்புக்காக தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு வந்தபோது என்ன கொண்டு வந்தாா்கள் என்பதை யாரும் சோதனையிடவில்லை.
நிதி வாக்குறுதி தொடா்பான அட்டைகளை மத்திய நிதியமைச்சா் விநியோகிக்கிறாா். அவா் மீது தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீா்களா? மம்தா பானா்ஜி

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

