தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு!

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

சாம்ராட் செளதரி - படம்: ஏஎன்ஐ

Updated On :14 ஏப்ரல் 2026, 4:32 pm IST

பிகார் மாநிலத்தின் புதிய முதல்வராக அந்த மாநிலத்தின் துணை முதல்வர் சாம்ராட் செளதரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை எம்.பி.யும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், பிகார் முதல்வர் பதவியை இன்று(ஏப். 14) ராஜிநாமா செய்த நிலையில், புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிகார் மாநிலத்தின் பாஜக சட்டப்பேரவைத் தலைவராக சாம்ராட் செளதரி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் பாஜகவின் மத்திய பார்வையாளரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் செளகான் அறிவித்துள்ளார்.

பிகார் அமைச்சரவைக் கூட்டம் இன்று(ஏப். 14 நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, நிதீஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்து, கடிதத்தை ஆளுமர் சையது அடா ஹஸ்னைனிடம் அளித்தார்.

இந்த நிலையில் பிகார் மாநிலத்தின் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி நாளை(ஏப். 15) பதவியேற்கவுள்ளார்.

பிகார் மாநிலத்தில் பாஜவைச் சேர்ந்த முதல் முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வாகியுள்ளார்.

2023 முதல் ஜூலை 2024 வரை பிகார் மாநில பாஜக தலைவராகவும் சாம்ராட் செளதரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Samrat Chaudhary, the Deputy Chief Minister of Bihar, has been selected as the state's new Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.