வாக்குச் சாவடிகளின் பயோ-மெட்ரிக் மூலம் வாக்காளர்களின் அடையாளத்தை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் ஏப். 23 மற்றும் மேற்கு வங்கத்தில் ஏப். 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை பயோ-மெட்ரிக் முறையில் அடையாளம் காண உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “சில மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், பயோ-மெட்ரிக் முறையை அமல்படுத்துவது நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதற்கு பதிலளித்த மனுதாரர், “தற்போது அத்தகைய நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரவில்லை. மாறாக, இந்த விவகாரத்தை பரிசீலிக்கும் வகையில் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று மட்டுமே கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ”அடுத்த நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டுமா என்பதை இந்திய தேர்தல் ஆணையமே தீர்மானிக்க வேண்டும். எனவே நோட்டீஸ் அனுப்பப்படுகிறது” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பான நோட்டீஸ் இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி!
Summary
Biometric System for Voters at Polling Stations! Supreme Court Issues Notice.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணியாளர்களை தேர்தல் ஆணையமே தேர்ந்தெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்

பவன் கேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

