தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

சரியாக 7 ஆண்டுகளுக்குப் பின் ஈரானிய எண்ணெய் கப்பல்கள் இந்திய கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

News image

ஈரானிய கப்பல்கள் - பிரதி படம் - ANI

Updated On :13 ஏப்ரல் 2026, 1:26 pm IST

சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின், சூப்பர் டேங்கர்ஸ் என்று அழைக்கப்படும் ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் இரண்டு, இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் நங்கூரமிட்டுள்ளன.

ஈரானிய கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற இரண்டு சூப்பர் டேங்கர்கள், கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் உள்ள இந்தியத் துறைமுகங்களுக்கு வந்துள்ளன. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் ஈரானிய எண்ணெய் கப்பல்களின் முதல் வருகை இதுவென கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஈரானிய தேசிய டேங்கர் நிறுவனத்தால் இயக்கப்படும் மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பலான 'ஃபெலிசிட்டி', மார்ச் மாத நடுப்பகுதியில் கார்க் தீவிலிருந்து நிரப்பப்பட்ட சுமார் 2 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு குஜராத் கடற்கரையில் உள்ள சிக்கா அருகே நங்கூரம் போடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது டேங்கர் கப்பல் ஜயா, ஒடிசா கடற்கரையருகே உள்ள பாராதீப் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால், இந்தியாவுக்கு எண்ணெய் கப்பல்கள் வருகை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் அமெரிக்கா வழங்கிய தடை விலக்கலைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் காரணமாக, உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஈரான் எண்ணெய்யை விநியோகம் செய்ய அமெரிக்கா ஒரு மாத காலதடை விலக்கலை அறிவித்திருக்கிறது.

பாரதீப துறைமுகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பராமரித்து வருகிறது. அதுபோல சிகா துறைமுகதை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.

கடந்த மாதம் குஜராத்தின் வாடினார் துறைமுகத்துக்கு வரவேண்டிய ஈரானிய எண்ணெய் கப்பல், பணப்பரிமாற்ற சிக்கலால் சீனாவுக்குத் திருப்பிவிடப்பட்டிருந்தது. முன்னதாக, ஈரானில் இருந்து அதிகப்பட்டியான எண்ணெய் பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Exactly 7 years later, Iranian oil tankers are anchored in the Indian Ocean.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.