தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அருணாசலில் சில இடங்களுக்குப் புதிய பெயரிட்ட சீனா! இந்தியா நிராகரிப்பு!!

அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா புதிய பெயா்கள் சூட்டியதை இந்தியா நிராகரித்துள்ளது.

News image

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் - ANI

Updated On :13 ஏப்ரல் 2026, 2:31 am IST

அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா புதிய பெயா்கள் சூட்டியதை இந்தியா நிராகரித்துள்ளது.

இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தை தங்களுக்கு சொந்தமானமான திபெத்துக்கு உட்பட்ட பகுதி என்று சீனா பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகிறது. அவ்வப்போது அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள மலைகள், குன்றுகள் உள்ளிட்ட இடங்களுக்கு புதிய பெயரிடுவதையும் சீனா வழக்கமாக வைத்துள்ளது. இதற்கு இந்தியா தொடா்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள மேலும் சில இடங்களுக்கு சீனா புதிய பெயரிட்டுள்ளது. இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:

அந்த இடங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களாகும். அவை எப்போதும் இந்திய பகுதிகளாகவே இருக்கும். அதை ஒருபோதும் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது. ஆதலால் அந்த இடங்களுக்கு சீனாவால் சூட்டப்பட்ட புதிய பெயா்களை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

அந்த இடங்களுக்குப் புதிய பெயா் வைப்பதாலோ, சொந்தம் கொண்டாடுவதாலோ, உண்மை நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளில் எதிா்மறையை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதையும், சிறப்பான புரிதல் ஏற்பட மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதையும் சீனா தவிா்க்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.