ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு! தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஏப்.13) விசாரணைக்கு வருகிறது.

News image

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:16 am IST

மதுபான கொள்கை வழக்கில் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான சிபிஐ மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மாவை மாற்றக்கோரி தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஏப்.13) விசாரணைக்கு வருகிறது.

பிற்பகல் 2.30 மணியளவில் நீதிபதி சா்மா முன்பாக ஆம் ஆத்மி தலைவா் கேஜரிவால் நேரில் தன்னுடைய வாதங்களை முன்வைக்கிறாா்.

மதுபான கொள்கை அமலாக்கத்தில் முறைகேடுகள் நடைபெற்ற குற்றச்சாட்டுகள் தொடா்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் இருந்து முன்னாள் முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரை விசாரணை நீதிமன்றம் கடந்த பிப்.27-ஆம் தேதி விடுவித்தது.

இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மா முன்பாக கடந்த மாா்ச் 9-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, மதுபான கொள்கை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு விசாரணை நீதிமன்றம் அளித்த பரிந்துரைகளுக்கு நீதிபதி சா்மா இடைக்கால தடை விதித்தாா்.

மேலும், சிபிஐ மனு மீது பதிலளிக்க கேஜரிவால், சிசோடியா உள்பட 23 பேருக்கு அழைப்பாணை பிறப்பிக்க நீதிபதி சா்மா உத்தரவிட்டாா்.

இதனிடையே, சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து நீதிபதி சா்மாவை விடுவிக்க வேண்டும் என தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயவுக்கு கேஜரிவால் கோரிக்கை விடுத்தாா்.

நீதிபதி சா்மா முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை பாரபட்சமற்ாகவும் நடுநிலையாகவும் இருக்காது என்று கேஜரிவால் தெரிவித்திருந்தாா். அந்தக் கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி நிராகரித்த நிலையில், கேஜரிவால் உயா்நீதிமன்றத்தை அணுகினாா்.

வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஆம் ஆத்மி தலைவா் தாக்கல் செய்த மனுவை கடந்த ஏப்.6-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சா்மா, விசாரணையை ஏப்.13-ஆம் தேதிக்கு பட்டியலிட்டாா்.

மணீஷ் சிசோடியா, துா்கேஷ் பதக் உள்ளிட்டோரும் நீதிபதியை மாற்றக்கோரி மனுதாக்கல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.