மகாராஷ்டிர மாநிலம் பாராமதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார், எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் அண்மையில் நிகழ்ந்த விமான விபத்தில் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா் பலியானார். அஜீத் பவாரின் மறைவைத் தொடா்ந்து, அவா் வகித்து வந்த துணை முதல்வா் பதவியை அவரது மனைவியான சுநேத்ரா பவார் ஏற்றாா்.
பிறகு தான் வகித்துவந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை அவர் ராஜிநாமா செய்தாா். இதனிடையே அஜீத் பவார் மற்றும் பாஜக எம்எல்ஏ சிவாஜி கார்டிலே ஆகியோரின் மறைவால் காலியான, புணேவின் பாராமதி மற்றும் அகிலயநகரின் ரஹுரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் துணை முதல்வர் சுநேத்ரா பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் பாராமதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆகாஷ் மோர் என்பவர் போட்டியிடுகிறார்.
சுநேத்ரா பவாருக்கு ஆதரவாக காங்கிரஸ் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பாராமதி தொகுதி எம்.பி. சுப்ரியா சுலேவும் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அஜித் பவாருக்கு மரியாதை செலுத்தும்பொருட்டு சுநேத்ரா பவாருக்கு ஆதரவாக காங்கிரஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார். அஜித் பவார் காங்கிரஸ் கட்சியில் இருந்துதான் தனது அரசியல் பயணத்தையும் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் காங்கிரஸுக்கு இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஏப். 23 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் பாராமதி தொகுதிக்கான வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.
Summary
Supriya Sule urges Congress to withdraw candidate for Baramati bypoll in favour of NCP's Sunetra Pawar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் சுநேத்ரா பவார்!

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுநேத்ரா பவார் வெற்றி!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!

வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

