மணிப்பூரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலைக் கண்டித்து, மக்கள் கண்டன பேரணிகளை வியாழக்கிழமை (ஏப்.9) நடத்தியுள்ளனர்.
மணிப்பூர், விஷ்ணுபூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.7) அதிகாலை பொதுமக்களின் குடியிருப்புப் பகுதியில் பயங்கரவாதிகள் குண்டுவீசியதில் இரண்டு குழந்தைகள் பலியானதோடு அவர்களுடைய தாய் படுகாயம் அடைந்தார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே கெல்மோல் அருகே அமைந்திருந்த மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்.) முகாமுக்குள் சுமார் 500 போராட்டக்காரர்கள் கொண்ட கும்பல் புகுந்து, பாதுகாப்பு வாகனங்களைச் சேதப்படுத்தியும் எரித்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் பலியாகினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்களால் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், மணிப்பூரின் 5 மாவட்டங்களில் 3 நாள்களுக்கு இணைய சேவையை அந்த மாநில அரசு முடக்கியுள்ளது. மேலும், சம்பவம் நடந்த விஷ்ணுபூரில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலைக் கண்டித்து மணிப்பூரில் பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி கண்டன பேரணிகளை நடத்தியும், டயர்களை எரித்தும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்தச் சம்பவத்தை அடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, ஆயுதமேந்திய குகி பயங்கரவாதிகள் மூன்று பேரை காவல்துறை கைது செய்தது. இருப்பினும், கைது செய்யப்பட்டவர்களுக்கு அந்த குண்டுவெடிப்புடன் நேரடித் தொடர்பு உள்ளதா என்பதை காவல் துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
Summary
People staged protest rallies on Thursday (April 9) to condemn the bomb attack that took place in Manipur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணிப்பூர்: குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு
முற்றுப்புள்ளி விழ வேண்டும்!

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

மணிப்பூரில் வெடிகுண்டு தாக்குதல்! 2 குழந்தைகள் பலி!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


