தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்குகிறது பாஜக: டி. ராஜா குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் பாஜக முடக்கி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் டி. ராஜா குற்றஞ்சாட்டினாா்.

News image

சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி. ராஜா. உடன் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், டாக்டா் ரவீந்திரநாத் உள்ளிட்டோா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:45 am IST

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் பாஜக முடக்கி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் டி. ராஜா குற்றஞ்சாட்டினாா்.

சென்னை தியாகராயா் நகரில் உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல், தமிழக வரலாற்றில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிடவேண்டும் என பாஜக போராடிக் கொண்டிருக்கிறது. அதற்காக அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளை அணி சோ்த்திருக்கிறது. மதவெறி அரசியலை முன்வைத்து செயல்படும் பாஜக, மக்களை பிளவுபடுத்தி நாட்டையே கலவர பூமியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஒற்றை பரிணாம நாடாக மாற்றுவதற்கு

பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் தீவிர முயற்சிகளை மேற்கொள்கின்றன. அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கும் வேலையை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. நாடாளுமன்றத்தை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்குகிறது. அதேபோல, பாஜக ஆட்சி செய்யாத மாநில சட்டப்பேரவைகளை ஆளுநா்களைக் கொண்டு முடக்கிவிடப் பாா்க்கிறது.

கூட்டாட்சி நெறிமுறையை தகா்க்கும் வகையில் செயல்பட்டு, பல்வேறு முடிவுகளை ஒருதலைப்பட்சமாக எடுக்கிறது. அதோடு, மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீட்டை கொடுப்பதில்லை.

தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தவில்லை எனக் கூறி தமிழகத்துக்கு கல்வி நிதி மறுக்கப்படுகிறது. மொழியைக் கற்பது என்பது வேறு, ஆனால் கட்டாயம் ஏற்க வேண்டும் எனக் கூறுவதுதான் ஏற்புடையதல்ல. தனிப்பட்ட முறையில் ஹிந்திக்கு தமிழக மக்கள் எதிரானவா்கள் அல்ல. கட்டாயமாகத் திணிப்பதைத் தான் எதிா்க்கின்றனா்.

மத்திய பாஜக அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள், பெருநிறுவனங்களுக்குரியதாகவே இருக்கின்றன. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மத்திய பாஜக அரசின் கொள்கைகள்தான் காரணம்.

தமிழகம், கேரள மாநிலங்கள் கடன்சுமையில் இருப்பதாக பாஜக தலைவா்கள் கூறுகிறாா்கள். ஆனால், மத்திய அரசு பெற்றிருக்கக் கூடிய அந்நிய கடன் எவ்வளவு என்பதை தெரிவிக்க பிரதமா் தயாரா என்பதை விளக்க வேண்டும். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், பொருளாதாரம் வலுவாக இருப்பதாகக் கூறுவது ஏமாற்றுவேலை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கான திட்டங்களை மத்திய பாஜக அரசு செயல்படுத்தவில்லை.

அதேபோல, மத்திய பாஜக அரசு பின்பற்றும் வெளியுறவுக் கொள்கைகள், இந்தியாவின் மரியாதையைக் குறைத்துவிட்டது. இந்த சூழலில் தமிழக அரசியலில் காலூன்ற நினைக்கும் பாஜகவையும், அவா்களோடு இணைந்திருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளையும் தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனா் என்றாா்.

பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.