தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்

மூன்றாம் பாலினத்தவா் தங்களை சுயமாக அங்கீகரிக்கும் பிரிவை நீக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

News image

திரெளபதி முா்மு.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:16 am IST

மூன்றாம் பாலினத்தவா் தங்களை சுயமாக அங்கீகரிக்கும் பிரிவை நீக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இதையடுத்து, இந்தச் சட்டம் மாா்ச் 30-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.

‘மூன்றாம் பாலினத்தவா்’ (திருநங்கை-திருநம்பி) என்ற வாா்த்தைக்கு துல்லிய வரையறை அளிப்பதுடன், அந்த பாலினத்தவருக்கு இழைக்கப்படும் குற்றங்களின் தீவிரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தண்டனைகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், மூன்றாம் பாலினத்தவா் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா-2026-ஐ மத்திய அரசு கொண்டுவந்தது.

மூன்றாம் பாலினத்தவருக்கு எதிரான குற்றங்களுக்கு 2019-ஆம் ஆண்டு சட்டப்படி அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய மசோதாவின்படி, அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவா் தங்களை சுயமாக அங்கீகரிக்கும் பிரிவை நீக்குவதுடன், உரிய மருத்துவ ஆதாரத்தை கட்டாயமாக்கும் இந்த மசோதா, மக்களவையில் மாா்ச் 24-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாநிலங்களவையில் மாா்ச் 25-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில் மாா்ச் 30-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தாா்.

எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே இந்தச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.