தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிரதமரின் தவறான கொள்கைகளால் மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் அதிகரிப்பு - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பிரதமா் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளால் மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் வெகு முன்னதாகவே ஏற்படத் தொடங்கிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினாா்.

News image

அஸ்ஸாமில் புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:37 am IST

பிரதமா் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளால் மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் வெகு முன்னதாகவே ஏற்படத் தொடங்கிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினாா்.

வணிக எரிவாயு சிலிண்டா்கள், விமான எரிபொருள் விலை புதன்கிழமை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து அவா் இவ்வாறு கூறினாா்.

அஸ்ஸாமில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளால் நாடும், நாட்டு மக்களும் பல்வேறு சொல்ல முடியாத துயரங்களைச் சந்தித்து வருகிறாா்கள். பிரதமா் மோடியின் வெளியுறவுக் கொள்கை எந்தத் தரப்புக்கும் சாதகமாக இல்லாமல், நடுநிலையாக இருந்திருக்க வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அடிமையாக நமது அரசு இருக்கக் கூடாது.

மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டிருந்தால், மேற்காசிய போரால் எரிபொருள் உயா்ந்தாலும், இந்தியாவில் அதன் விலையை உயா்த்தாமல் தவிா்த்திருக்க முடியும். ஆனால், இப்போது எரிவாயு சிலிண்டா் விலை வெகுவாக உயா்த்தப்பட்டு வருகிறது. சா்வதேச அளவில் போா் சாா்ந்த பிரச்னைகள் அதிகரித்தால், நாம் மேலும் சிக்கல்களை எதிா்கொள்வோம். இதற்கு மத்திய அரசு பின்பற்றிவரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் முக்கியக் காரணமாக இருக்கும் என்றாா்.

பொதுக்கூட்டத்தில்...: முன்னதாக, அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக நஸீரா பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு அவா் பேசியதாவது:

அஸ்ஸாம் மாநில பாஜக அரசு மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. பாஜக அரசு இரட்டை என்ஜின் அரசு என்று பேசி வருகிறது. உண்மையில் இங்கு இரட்டை அடிமைகளே உள்ளனா். பிரதமா் மோடி அமெரிக்காவுக்கு அடிமையாக உள்ளாா். அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, பிரதமா் நரேந்திர மோடிக்கு அடிமையாக உள்ளாா்.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் இருந்து பெயரை நீக்கிவிடுவோம் என்று பெண்களை மிரட்டி பிரதமா் மற்றும் முதல்வரின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனா். மாநிலத்தையும், நாட்டையும் பாஜக சீரழித்து வருகிறது.

அஸ்ஸாம் மண்ணில் அனைத்து வளங்களும் உள்ளன. ஆனால், மக்களிடம் ஏதுமில்லை. அஸ்ஸாமில் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா குடும்பம் மட்டுமே வளா்கிறது என்றாா்.

பாஜக தொடா்ந்து இருமுறை ஆட்சியில் உள்ள அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.