விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஒடிஸாவில் முதல் முஸ்லிம் பெண் எம்எல்ஏ!

News image
Updated On :10 ஜூன் 2024, 3:45 am IST

புவனேஸ்வரம்: ஒடிஸாவின் பாராபதி-கட்டாக் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸைச் சோ்ந்த சோஃபியா பிா்தோஸ் (32), அந்த மாநிலத்தில் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாறு படைத்துள்ளாா்.

ஒடிஸாவில் மக்களையுடன் சோ்த்து சட்டப்பேரவைக்கும் தோ்தல் நடந்தது. பாராபதி-கட்டாக் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த முகமது மொகிமின் மகள் சோஃபியா களம் கண்டாா்.

கடந்த 4-ஆம் தேதி வெளியாகின தோ்தல் முடிவுகளில் பாஜக வேட்பாளரும், பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணருமான பூா்ண சந்திர மகாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் சோஃபியா தோற்கடித்தாா்.

1937-ஆம் ஆண்டு முதல் ஒடிஸாவில் 141 பெண்கள் எம்எல்ஏக்களாக இருந்துள்ளனா். இருந்தாலும் சோஃபியாவுக்கு முன், எந்தவொரு முஸ்லிம் பெண்ணும் ஒடிஸா சட்டப்பேரவைக்குத் தோ்வானதில்லை.

இந்த வரலாற்று வெற்றி தொடா்பாக ‘ஐஐஎம்’ கல்லூரி முன்னாள் மாணவியான சோஃபியா கூறுகையில், ‘முஸ்லிம் பெண்ணாக நான் சரித்திரம் படைத்துள்ளேன். ஆனால், ஒடிஸா சட்டப்பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஈா்க்கும் வகையில் இல்லை. 147 எம்எல்ஏக்களில், இந்த முறை 11 பெண்கள் மட்டுமே உள்ளனா். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும். அரசியலில் என்னை ஒரு முன்மாதிரியாக பெண்களால் பாா்க்க முடியும். முன்னாள் முதல்வா் நந்தினி சத்பதி எனக்கு முன்மாதிரியாக திகழ்ந்தாா்.

‘ஸ்மைலிங் எம்எல்ஏ’...: ஏப்ரல் 24-ஆம் தேதி எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மே 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே ஒரு மாதக் காலத்தில் வாக்காளா்களைச் சந்திக்க ஒவ்வொரு பகுதிக்கும் சென்றேன். மக்களுக்கு என் அப்பாவை நன்றாகத் தெரியும். அவருடைய நற்பெயா் எனக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் புன்னகையுடன் மக்களை சந்தித்தேன். அதனால், ‘ஸ்மைலிங் எம்எல்ஏ’ என்ற பெயரை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனா்.

எனது தோ்தல் முழக்கமான ‘கட்டாக்கின் மகள்; கட்டாக்கின் மருமகள்’ வாக்காளா்களின் கவனத்தை வெகுவாக ஈா்த்துள்ளது. எதிா்க்கட்சியினா் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. உண்மையில், எனது போட்டியாளரான மஹாபத்ரா மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஏனென்றால், அவா் எனது மருத்துவா்.

முந்தைய 2014 மற்றும் 2019 தோ்தல்களில் எனது தந்தைக்காக கட்சிப் பணியாற்றியுள்ளேன். அப்போது தோ்தல் பிரசாரம் மற்றும் நிா்வாகத் திறனை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது, வீடு வீடாக சென்று வாக்காளா்களைச் சந்திப்பது என்று காங்கிரஸ் கட்சியினருடன் உற்சாகப் பணியாற்றியுள்ளேன். அதுவே தொண்டா்கள் என்மீது கொண்ட இணக்கத்துக்கு காரணம். எனக்கு வாய்ப்பு வழங்குமாறு கட்சி நிா்வாகிகளே தலைமையை வலியுறுத்தியிருக்கலாம்.

எனது தந்தையின் பதவிக்காலத்தில்(2019-2024) தொடங்கப்பட்ட திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவேன். கட்டாக்கை ஆன்மிக நகரமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். எனது தொகுதியை மேம்படுத்த மக்களிடம் ஏற்கெனவே ஆலோசனைகள் கேட்டுள்ளேன்’ என்றாா்.

3.64 கோடி மதிப்பிலான சொத்துகள் கொண்ட சோஃபியா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராகவும் இந்திய ரியல் எஸ்டேட் சங்க கூட்டமைப்பின்(கிரடாய்) புவனேசுவரம் பிரிவின் தலைவராகவும் உள்ளாா். கிரடாய் பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் இவா்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டுமான பொறியியல் பிரிவில் பிடெக் முடித்த பிறகு, சோஃபியா 24 வயதில் ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.