புது தில்லி: நாட்டுக்கு மிகச் சரியான நேரத்தில் கிடைத்த சரியான தலைவர் நரேந்திர மோடி என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புழாராம் சூட்டியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடைபெற்றது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவிருப்பதாக பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த கூட்டத்த்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, நரேந்திர மோடியின் எதிர்காலப் பார்வை, நோக்கம், அதனை செயல்படுத்தும் விதம் அனைத்தும் மிகவும் நேர்த்தியானது. உண்மையான உத்வேகத்துடன் அவர் அனைத்து கொள்கைகளையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். இன்றைய நிலையில், நாட்டுக்கு மிகச் சரியான நேரத்தில் கிடைத்த மிகச் சரியான தலைவர் நரேந்திர மோடி. இது நாட்டுக்குக் கிடைத்த மிகக் சிறந்த வாய்ப்பு. இப்போது நாம் இதனை தவறவிட்டுவிட்டால், எப்போதும் இந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்காது என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து தனது ஆதரவு எம்.பி.க்களின் பட்டியலை வழங்கி, ஆட்சியமைக்க உரிமைகோரவிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், மத்தியில் கூட்டணி அரசை அக்கட்சி அமைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வளா்ச்சியடைந்த புதுச்சேரியைக் கட்டமைக்க உறுதியாக உள்ளோம்: பிரதமா் மோடிக்கு முதல்வா் ரங்கசாமி கடிதம்

ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்
தமிழ்நாடு திராவிட நாகரிகத்தின் மையம்: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

தே. ஜ. கூட்டணிக்கு ஆதரவாக நாளை கோவையில் சந்திரபாபு நாயுடு பிரசாரம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


