புது டில்லி, மார்ச். 12- குஜராத்தில் ஜனதா முன்னணி அரசு ராஜிநாமா செய்ததையடுத்து இன்று ராஷ்டிரபதி ஆட்சி அமலாக்கப்பட்டது. அசெம்பிளி செயல்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ராஷ்டிரபதி ஆட்சியை அமலாக்குமாறும், அசெம்பிளி செயல்படுவதை நிறுத்தி வைக்குமாறும் சிபாரிசு செய்து கவர்னர் கே. கே.விசுவநாதன் அனுப்பிய அறிக்கை கிடைத்தபின் ராஷ்டிரபதி பக்ருதீன் அலி அஹமது அரசியல் சட்டம் 356-வது ஷரத்தின் கீழ் பிரகடனத்தை வெளியிட்டார்.
ஆரம்பத்தில் மத்ய மந்திரி சபை கூடி கவர்னரின் சிபாரிசை அங்கீகரிக்க முடிவு செய்தது.
9 மாத காலமாக இருந்து வந்த ஜனதா முன்னணி அரசுக்கு ஆதரவாக அசெம்பிளியில் 87 வோட்டுகளும், எதிர்த்து 89 வோட்டுகளும் கிடைத்தன. 1976-77க்கு சிவில் சப்ளை இலாகாவுக்கான பட்ஜெட் மான்யக் கோரிக்கை மீது வோட்டெடுப்பை புது காங்கிரஸ் தலைமை கொறடா சாபில்தாஸ் மேத்தா வலியுறுத்தினார்.
அரசு தோல்வியடைந்த சில மணி நேரத்திற்குள் பாபுபாய் படேல் ராஜ்பவனுக்குச் சென்று, தமது மந்திரி சபையின் ராஜிநாமாவைச் சமர்ப்பித்தார். ராஜிநாமாவை கவர்னர் கே. கே. விசுவநாதன் ஏற்றுக் கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை பதவியில் நீடிக்குமாறு பாபுபாய் படேலை கேட்டுக் கொண்டார். சட்டசபை புது காங்கிரஸ் கட்சித் தலைவர் மாதவ் சிங் சோலங்கி தனியாக கவர்னரைச் சந்தித்து சில நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
மாநிலத்தில் நிலைமை தெளிவாக இல்லை என்றும், எந்தக் கட்சியும் நிலையான மந்திரிசபை அமைக்கும் நிலையில் இல்லை என்றும் கவர்னர் தமது அறிக்கையில் கூறியிருப்பதாகத் தெரிகிறது. கவர்னரின் அறிக்கையை மத்ய மந்திரி சபை இன்று மாலை கூடிப் பரிசீலித்து தனது சிபாரிசை ராஷ்டிரபதிக்கு அனுப்பியது.
சிவில் சப்ளை இலாகா மான்யக் கோரிக்கை மீது அசெம்பிளியில் நடந்த வோட்டெடுப்பில் மந்திரி சபை தோல்வியடைந்ததை கவர்னர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.
ராஷ்டிரபதி பிரகடனம், கவர்னரின் அறிக்கை ஆகியவற்றின் நகல்கள் திங்களன்று பார்லிமெண்டின் இரு சபைகளிலும் சமர்ப்பிக்கப்படும். ...
த. நா.வில் பஸ் கட்டணம் உயர்வு - 15 ௨ முதல் அமல்
சென்னை. மார்ச், 13 - தமிழ் நாட்டில் பஸ் கட்டணம் மார்ச் 15 ௨ திங்கள் முதல் உயருகிறது. சென்னையிலும் இதர டவுன் சர்வீஸ்களிலும் ஐந்து காசு உயரும். இதர வெளியூர் பஸ் போக்குவரத்தில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 1 காசு வீதம் உயரும்.
சென்னை நகரைப் பொறுத்தவரையில், குறைந்தபட்ச கட்டணம் இப்போது 15 காசாக உள்ளது. இனி 20 காசு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்டேஜ் கட்டணம் 5 காசு வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கோட்டையில் இன்று மாலை நிருபர்களிடம் மேற்கண்ட கட்டண உயர்வு முடிவை நிதித்துறைச் செயலாளர் குகனும், உள்துறை செயலாளர் கே. சுப்பிரமணிய மும் அறிவித்தனர்.
Summary
13.3.1976: Rashtrapati Rule in Gujarat
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோலிவுட் ஸ்டூடியோ!

ஐஎஸ்எல் கால்பந்து: முகமதன் - டில்லி ஆட்டம் டிரா!

17.4.1976: அம்பத்தூரில் ரூ. 2.55 கோடி செலவில் பால் பண்ணை - ராஷ்டிரபதி துவக்கி வைத்தார்

11.3.1976: த.நா. அரிசி கொள்முதல் உடனடி நிறுத்தம் - கவர்னர் அறிவிப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


