சென்னை, ஏப். 19 - சென்னை மாநகரில் உள்ள மாநகராட்சி ஆரம்ப, நடுத்தரப் பள்ளிகளில் ஐந்தாவது வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் ஆரம்ப, நடுத்தரப் பள்ளிகளில் 350-ல் ஐந்தாவது வகுப்பில் ஏறத்தாழ 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இப்போதுள்ள நடைமுறையின்படி ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து தேர்வு நடத்துகிறது.
இதற்குப் பதிலாக மாநகராட்சிப் பள்ளிகளில் ஐந்தாவது வகுப்பில் படிக்கும் எல்லா மாணவ, மாணவிகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சித் தனி அதிகாரி யோசனை கூறியிருந்தார்.
இந்த ஆண்டு முதலே மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்த யோசிக்கப்பட்டது. ஆனால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடிக்க போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் அடுத்த ஆண்டு முதல் இந்தப் பொதுத் தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பாக்.குடன் ராஜ்கந்திர உறவு பற்றியும் பேச டில்லி தயார் - பூட்டோவுக்கு இந்திரா காந்தி கடிதம்
புது டில்லி, ஏப். 19- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் ராஜதந்திர உறவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் உட்பட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தீராமலிருக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க தான் தயாராக இருப்பதாக இந்தியா, பாகிஸ்தானுக்குத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11-ந் தேதி பிரதம மந்திரி இந்திரா காந்தி, பாகிஸ்தான் பிரதம மந்திரி பூட்டோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த விஷயங்கள் பற்றி விவாதிக்க இந்தியா தயாராயிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மார்ச் 27-ந் தேதி பூட்டோ எழுதிய கடிதத்துக்குப் பதிலளித்து இந்திரா காந்தி இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.
இம்மாத ஆரம்பத்தில் பூட்டோவின் கடிதம் டில்லிக்குக் கிடைத்ததுள்ளது. இரு நாடுகளின் வான்வெளி மீது விமானப் பயணங்கள் நிறுத்தம் சம்பந்தமாக சர்வதேச விமானப்போக்குவரத்து ஸ்தாபனத்திலிருந்து தன்னுடைய வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளத் தயாராயிருப்பதாக பூட்டோ தம்முடைய கடிதத்தில் கூறியிருந்தார். "சகஜ உறவை" ஏற்படுத்திக்கொள்வதற்காள மேல் நடவடிக்கையாக சிம்லா ஒப்பந்த உணர்வுக்கு இணங்க இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்தியா சென்ற ஆண்டே கூறியிருந்தது.
1971-ம் ஆண்டு ஆரம்பத்தில் இந்திய விமானம் வழிமறிக்கப்பட்டு, லாகூருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டன. இவற்றை மீண்டும் தொடங்குவது பற்றி இரு நாடுகளிடையே இரண்டு முறை நடந்த பேச்சுக்களிலும் உடன்பாடு ஏற்படவில்லை. ...
Summary
April 20, 1976: Common Examination for 5th Grade at Chennai Corporation Schools
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம்: அவகாசம் நீட்டிப்பு!

மாநகராட்சி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி

மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

10 ஆம் வகுப்பு தேர்வு! திருப்பூர் மாவட்டம் 96.28% தேர்ச்சியுடன் 11-வது இடம்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |
தினமணி செய்திச் சேவை

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
தினமணி செய்திச் சேவை

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK
தினமணி செய்திச் சேவை


