ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரூ.1,40,000 சம்பளத்தில் ரயில் டெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் வாய்ப்பு!

ரயில் டெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

ரூ.1,40,000 சம்பளத்தில் ரயில் டெல் நிறுவனத்தில் வேலை - ரயில் டெல்

Updated On :1 ஏப்ரல் 2026, 2:56 pm IST

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனமான ரயில் டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Manager

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.40,000 - ரூ.1,40,000

வயது வரம்பு: 21 -லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, கணினி அறிவியல், கணினி மற்றும் தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மின் மற்றும் மின்னணுவியல், இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகிய ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 ஆண்டுகள் பணி அனு பவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager,Technical (Database Administration)

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.50,000 - ரூ.1,60,000

வயது வரம்பு: 23-லிருந்து 31-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மின்னணுவியல் மற்றும் டெலிகாம், கணினி அறிவியல், கணினி மற்றும் தகவல் தொடர்பியல், தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் மின்னணுவியல் ஆகிய ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Manager(Technical (System Administration)

காலியிடங்கள்: 2 (SC-1, EWS-1)

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

வயது வரம்பு: 27-லிருந்து 34-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, கணினி அறிவியல், கணினி மற்றும் தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் கருவியியல் ஆகிய ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 6ஆண்டுகள் பணி அனு பவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 1,200. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.600. இதனை "RailTel Corporation of India Limited", New Delhi என்ற புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் வங்கிவரைவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.railtel.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப தபால் கவர் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Sr.Deputy General Manager/HR,RailTel Corporation of India Ltd., Plate-A, 6th Floor, Office Block-II, East Kidwai Nagar,New Delhi - 110 023.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 6.4.2026

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Notice For Regular Recruitment in Technical Department of RailTel Corporation including backlog vacancies for Data Centre Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.