2011 தேர்தலில் தேமுதிக இல்லை என்றால் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது என தேமுதிக எம்.பி., எல்.கே. சுதீஷ் இன்று (மார்ச் 25) தெரிவித்தார்.
இப்போது பேசும் எடப்பாடி பழனிசாமி 2011 தேர்தலில் எங்கு இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் விமர்சித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு தமிழிசை செளந்தரராஜனுடன் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை இன்று (மார்ச் 25) தொடங்கினார்.
இதற்கு முன்பு 193 தொகுதிகளில் பிரசாரம் செய்திருந்தாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார்.
இதில், பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி தேமுதிகவை அங்கீகாரம் இல்லாதக் கட்சி எனக் குறிப்பிட்டிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ''அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடம், அங்கீகரிக்கப்பட்ட விசிகவுக்கு குறைந்த தொகுதி. இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகைப் புரிந்த தேமுதிக எம்.பி., எல்.கே. சுதீஷ், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களுடன் பேசியிருந்தார்.
எல்.கே. சுதீஷ் பேசியதாவது:
''திமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகளில், விரும்பிக் கேட்ட தொகுதிகளில் 70% தர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்.
2011 தேர்தலில் தேமுதிக இல்லையென்றால் அதிமுக ஆட்சிக்கே வந்திருக்காது. இப்போது பேசும் எடப்பாடி பழனிசாமி 2011 தேர்தலில் எங்கு இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
if DMDK was not there in the 2011 elections, AIADMK would not formed government DMDK MP, L.K. Sudhish
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி

6-ஆவது வெற்றியை எதிர்நோக்கும் இபிஎஸ்!

வாக்கு சேகரித்த தேமுதிக எம்.பி.யிடம் ரயில் பயணிகள் கோரிக்கை மனு அளிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


