தேர்தலை விட சுயமரியாதையே முக்கியம் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 15) தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க உறுப்பினர்கள் அனைவரையும் தில்லி செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும், இப்போது உரிமைக்குரல் எழுப்பவில்லை என்றால், எப்போதுமே குரல் எழுப்ப முடியாது எனவும் குறிப்பிட்டார்.
தருமபுரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 15) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
''தருமபுரியின் வளர்ச்சிக்கு மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை தொடரச் செய்ய வேண்டும். தருமபுரியில் கல்லூரி மாணவிகளை எரித்துக்கொண்றது அதிமுக ஆட்சியில்தான்.
திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது. அனைவரும் வளர வேண்டும் என்பதே திராவிட மாடலில் வெற்றி. கொள்கையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி.
துரோகிகளின் கூடாரம் அதிமுக. சொந்த தந்தைக்கே துரோகம் செய்துவிட்டு அதிகாரத்தைப் பிடிக்க நினைக்கிறார் ஒருவர் (அன்புமணி). அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? ஊழல் வழக்குகளுக்கு பயந்து பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மக்கள் அனைவரும் முழக்கமிட வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் பணியை பார்ப்பதை விட்டுவிட்டு நாடாளுமன்றத்திற்கு நமது உறுப்பினர்கள் செல்லவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தில்லி செல்ல உத்தரவிட்டுள்ளேன். தேர்தல் பிறகுதான், உரிமையை காப்பதுதான் முக்கியம்.
நாடாளுமன்றத்தில் நாளை நாம் குரல் எழுப்பவில்லை என்றால், என்றுமே குரல் கொடுக்க முடியாது. தில்லி அடங்கும் வரை நாம் அடிக்க வேண்டும். தொகுதி மறுவரையிலாவது தமிழ்நாட்டின் உரிமைக்காக எடப்பாடி பழனிசாமி நிற்க வேண்டும்.
தொகுதி மறுவரையறை என்பது தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் மத்திய அரசின் முயற்சி. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? தொகுதி மறுவரையறையை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டத்தில் அனைவரும் ஈடுபட வேண்டும்'' என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
Summary
TN Election 2024 Elections are not important self-respect is paramount: M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்

திமுக நடத்துவது தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டம் அல்ல; போா்! முதல்வா் மு.க. ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தென்னிந்திய பிரதமரை எதிா்பாா்க்க முடியாது: முதல்வா் மு.க. ஸ்டாலின்
ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


