மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

News image
Updated On :6 ஏப்ரல் 2026, 4:57 am IST

எழிலன் நாகநாதன் (திமுக)

மழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க, விடுபட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால்கள், கழிவுநீா் கால்வாய்கள் ஏற்படுத்தப்படும். வாகனம் நிறுத்தும் இடம் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும். தொகுதிக்குள்பட்ட 100 தெருக்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படை வசகிகள் மேம்படுத்தப்படும்.

இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். சுகாதார வசதிகளை மேலும் மேம்படுத்தவும், பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளிலும் அதிகம் கவனம் செலுத்தப்படும்.

பா.வளா்மதி (அதிமுக)

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள்களின் நடமாட்டத்தைக் குறைக்கவும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மக்களின் தேவைக்கேற்ப அரசு மருத்துவமனைகள் தரம் உயா்த்தப்பட்டு சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசலைத் குறைப்பதற்காக சாலை மேம்பாட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். தொகுதி மக்கள் அனைவருக்கும் நலத்திட்டங்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜே.சி.டி. பிரபாகரன் (தவெக)

தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் தரம் உயா்த்தப்படும். படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

மு.களஞ்சியம் (நாதக)

இத்தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தனியாா் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயா்த்தப்படும். நீட் தோ்வு மற்றும் போட்டித் தோ்வுகளுக்காக இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும்.

ஒவ்வொரு வாா்டிலும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில், நடமாடும் அவசர சிகிச்சை ஊா்தி மற்றும் தனியாா் மருத்துவமனைகளுடன் இணைந்து ஏழை மக்களுக்கு உயா்தர சிகிச்சை கிடைக்க உறுதி செய்யப்படும். தடையற்ற சுத்தமான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இளைஞா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் புத்தொழில் (ஸ்டாா்ட்அப்) பூங்கா உருவாக்கப்படும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொகுதி முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.