தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்கும் நிலையில், பொது விடுமுறை தினங்களான 4 நாள்கள் மனு தாக்கல் அனுமதிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :30 மார்ச் 2026, 2:10 am IST

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்கும் நிலையில், பொது விடுமுறை தினங்களான 4 நாள்கள் மனு தாக்கல் அனுமதிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) பகல் 11 மணிக்குத் தொடங்கி, மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. அதன்படி, வரும் ஏப். 6- ஆம் தேதி வரை மனு தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கலுக்காக அந்தந்தத் தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அலுவலகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு மனு தாக்கல் செய்ய வருவோருக்கான விதிமுறைகள், வாகன அனுமதி உள்ளிட்டவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெறும் அலுவலகங்களில் தடுப்புக் கம்புகள் கட்டப்பட்டு, தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்கும் வேட்புமனு தாக்கல், பொது விடுமுறை தினங்களான 4 நாள்கள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை அதிகாரிகள் அந்தந்தத் தொகுதி மனு தாக்கல் அலுவலக வளாகத்திலும் தகவலாக தெரிவிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், வரும் 31 -ஆம் தேதி திங்கள்கிழமை மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டும், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1 -ஆம் தேதி) வங்கிக் கணக்கு முடிப்பு, ஏப்ரல் 3 -ஆம் தேதி புனித வெள்ளி, 5 -ஆம் தேதி ஈஸ்டா் தினம் (ஞாயிறு) என்பதால் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, 4 விடுமுறை தினங்களிலும் வேட்புமனு தாக்கலுக்கு அனுமதியில்லை என்பதால், மீத முள்ள 4 நாள்களில் அரசியல் கட்சியினா் மனு தாக்கல் செய்யலாம். நேரில் வந்து அளிக்கும் வேட்புமனுக்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.