தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வானதி சீனிவாசன் வேட்புமனு! ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை பங்கேற்பு!

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி...

News image

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல் - x

Updated On :6 ஏப்ரல் 2026, 1:08 pm IST

கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

இந்த நிலையில், கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை அளித்தார்.

இவருடன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்ததால்தான் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக தாமதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், வானதி சீனிவாசனின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

இதேபோல், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

Summary

Vanathi Srinivasan Files Nomination! Rajasthan Chief Minister and Annamalai Participate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.