கேரள மாதிரி கடன் மாதிரியாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், கேரள தேர்தல் குறித்து ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் சசி தரூர் பேசியதாவது:
”நான் கேரள தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் பிரசாரக் குழுவின் துணைத் தலைவராக இருக்குமாறு கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதால் பணிகளை செய்து வருகிறேன். அனைத்து மாவட்டத்துக்கும் பயணம் மேற்கொண்டு மக்களிடம் பிரசாரம் செய்வதுதான் எனது பொறுப்பு.
முதல்வர் வேட்பாளர் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பதே சரியான வழியாக இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் இடது முன்னணி அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை உள்ளது. மாற்றத்துக்கு மிகவும் நம்பகமான மாற்றமாக நாங்கள் இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி சாத்தியமான மாற்றாக மக்கள் பார்க்கவில்லை.
சமீப ஆண்டுகளாக கேரளம் உண்மையிலேயே அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. முன்மாதிரி மாநிலமாக அழைக்கப்பட்ட கேரளம், தற்போது கடன் மாதிரி மாநிலமாக மாறிவிட்டது. கடனில் மூழ்கியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூட அரசிடம் பணமில்லாமல் கடன் வாங்குகிறார்கள். வளர்ச்சிக்கு செலவிடும் தொகையைவிட, கடனுக்கான வட்டிக்கும், ஓய்வூதியங்களுக்கும் செலவிடுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Kerala model turned into a debt model! Shashi Tharoor criticizes
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

கேரளத்தில் சசி தரூரின் பாதுகாவலர், ஓட்டுநர் மீது தாக்குதல்! ஒருவர் கைது!

பாஜகவுக்கு செலுத்தும் வாக்குகள் வீணாகும்! சசி தரூர்

கேரள தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் எம்பிக்கள்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


