மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

தொழில் ஒழுங்கோடு... கிசு கிசு வராமல்... ரசிகைக்கு விஜய் அளித்த பதில்!

தன் ரசிகையின் கடிதத்திற்குப் பதிலளித்த விஜய்...

News image

விஜய்

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

1996-ல் ரசிகையின் உணர்வுப்பூர்வமான கடித்தத்திற்குத் தற்போதையை முதல்வர் விஜய் அளித்த பதில் கடிதம்.

என் இளைய தளபதியே...

சாதாரணமாக உங்கள் ரசிகைகள் அனைவரும் உங்களின் அழகை பற்றியே கடிதம் எழுதுவார்கள். ஆனால், இந்த ரசிகையிடம் கொஞ்சம் வித்தியாசம்... அப்படி என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா?

உங்களிடத்தில் எனக்கு பிடித்தது எத்தனையோ... உங்களின் இனிமையான குணம், அடக்கமான பண்பு, இனிமை அமைதியான முகம், இனிமையான கண்கள், அப்பா அம்மாவிடம் அன்பாக இருப்பது, மேலும் இத்தனை வெற்றி படங்களில் நடிப்பது, உங்களை பற்றி ஒரு கிசு கிகவும் வராமல் உங்களுடைய தொழிலில் ஒழுங்கோடும் முறையோடும் இருப்பது.

உன்னைப் பற்றி பத்திரிகையில் வரும் செய்திகளைப் படிக்கும் போது உன் அம்மா மிகவும் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்க்கு... நடனம் என்று சொல்லப் போனால் உங்கள் நடனம் மட் டுமே பிடிக்கும் தேவா படத்தில்,

"ஒரு கடிதம் எழுதினேன், அதில் என் உயிரை அனுப்பினேன்," என்ற பாட்டில் நீ செய்யும் குறும்புகளும், பாடிக் கொண்டே வந்து ஓடையில் குதிப்பதும், அந்த தண்ணீர் உன் காதலியின் முகத்தில் படுவதும், நான் பலமுறை பார்த்து ரசித்தேன். நீயும் உன் அப்பாவும் சேர்ந்தால் குறும்புக்கு எல்லையே இருக்காது.. என்று நினைக்கிறேன்.

நீ ரொம்பவும் கொடுத்து வைத்தவர். இல்லையேல் இப்படி ஒரு அப்பா கிடைத்திருப்பாரா..?

இப்படிக்கு,

உன் ரசிகை,

த. ஜனனி BA, திருச்சி.

பின் குறிப்பு:- ஒரு முழு நாளில் உன் சுகமான நேரம் எது..? பதில் கொடுக்கவும்.

-------

அன்புள்ள ஜனனி....

நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். பணம் சம் பாதிப்பது முக்கியமல்ல; நல்லவன் என்ற பெயரைச் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் என் பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்த வேதம்.

நான் எனக்காக எந்த சொத்தும் (Property) சேர்க்க ஆசைப்படவில்லை. காரணம், எனக்காக கடவுள் கொடுத்திருக்கும் பெரிய சொத்து, ஆஸ்தி, என் பெற்றோர்கள்தான் . ஒரு நாள் முழுவதிலும் என் சுகமான நேரம் எது...? என்று நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். பதில் இதுதான்.. நாள் முழுவதும் ஷுட்டிங்கில் உழைத்துவிட்டு வீட்டுக்கு சென்றதும் என்னுடைய அம்மா மடியில் தலை வைத்துப்படுக்கும் அந்த இரண்டு நிமிடங்கள்தான் எனக்கு சுகமான நேரம்.

உங்களிடமும் நான் அதைத்தான் சொல்கிறேன். கடவுள் எல்லா இடத்திலும் எல்லார் கண்களிலும் தெரிவதில்லை என்ற காரணத்தால்தான் தாயைப் படைத்திருக்கிறான். தாயை நேசிக்கிறவன் கடவுளை நேசிக்கிறான் என்று கூறுவார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் எழுதியது போல் நான் கொடுத்து வைத்தவன்தான்.

அன்புடன்,

விஜய்.

சினிமா எக்ஸ்பிரஸ் நவ.1, 1996 தீபாவளி மலரில் வெளியான கடிதம்.

The reply letter sent by Chief Minister Vijay to a female fan's heartfelt letter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.