பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

10 கோடி பார்வைகளைக் கடந்த ஆரா பாடல்!

ஆரா 10/10 பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்தது...

News image
Updated On :23 மே 2026, 4:33 pm IST

ஹிப் ஹாப் ஆதியின் புதிய திரைப்பட பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ராப் இசை பாடல்கள் மூலம் அடையாளம் பெற்று, பின் திரைப்படங்களுக்கு இசையமைத்து பெரிதாகக் கவனிக்கப்பட்டார். பின், மீசையை முறுக்கு திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தொடர்ந்து சிவக்குமார் சபதம், வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஆனால், எதிர்பார்க்கப்பட்ட வெற்றிகள் கிடைக்கவில்லை. அதனால், நடிப்பில் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

மீசையை முறுக்கு - 2 திரைப்படத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில், இவர் நாயகனாக நடிக்க கேத்திகா ஷர்மா நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் பாடலான ஆரா 10/10 ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று ரீல்ஸ்களாகவும் மாறின. இந்தியளவில் கவனம்பெற்ற இப்பாடல் இதுவரை யூடியூபில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

மேலும், இப்படத்தில் இடம்பெற்ற பிற பாடல்களும் பெரிதாகக் கவனிக்கப்பட்டு வருவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ள்ளது.

Hip Hop Aadhi's new movie song has crossed 100 million views.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.