இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

ரவி மோகனின் கராத்தே பாபு பட முதல் பாடல்! புரோமோ வெளியீடு!

கராத்தே பாபு திரைப்பட முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது...

News image

கராத்தே பாபு படத்தில் ரவி மோகன் - youtube

Updated On :11 ஜூன் 2026, 7:51 pm IST

நடிகர் ரவி மோகனின் “கராத்தே பாபு” திரைப்பட முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

டாடா திரைப்பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்துள்ள புதிய படம் “கராத்தே பாபு”. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், நடிகர் ரவி மோகனின் அரசியல்வாதி கதாபாத்திரம் பெரும் பேசுபொருளானது.

இந்தப் படத்தில், நடிகர்கள் நாசர், கே.எஸ். ரவிக்குமார், காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி, டாவ்டி எஸ் ஜிவால், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தின் “ராசாதி ராசா” எனும் முதல் பாடலின் புரோமோ விடியோவை படக்குழுவினர் இன்று (ஜூன் 11) வெளியிட்டுள்ளனர்.

பாடகி மீனாட்சி இளையராஜா வரிகள் எழுதி பாடியுள்ள இந்தப் பாடல் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The promo video for the first song from actor Ravi Mohan's film "Karate Babu" has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.